Monday, December 19, 2011

கர்த்தருடைய வழிகள்


நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே. – எரேமியா. 29:11.


.
ஒரு கப்பல் மூழ்கிப் போனதினால், அதிலிருந்த அனைவரும் மரித்துப் போனார்கள். ஒருவன் மாத்திரம் தப்பி ஒரு கட்டையைப் பிடித்து, ஒரு தனிப்பட்ட ஒரு தீவில் கரை ஏறி, ஏதாவது கப்பல் அந்தப் பக்கம் வரும்போது தான் காப்பாற்றப்படுவோம் என்கிற நம்பிக்கையோடு, காத்திருந்தான். தொடர்ந்து விடாமல் ஜெபித்து யாராவது தன்னைக் காப்பாற்ற வரமாட்டார்களா? என்று நெடுநாளாய் காத்திருந்தான். ஒரு நாள் அவன் உணவைத் தேடி போயிருந்தபோது, அவன் அங்கிருந்த பொருட்களினால் செய்திருந்த கூடாரம் வெயிலில் நெருப்பு உண்டாகி, எல்லாம் எரிந்து சாம்பலாகிப் போனது. அவன் திரும்பி வந்துப்பார்த்தபோது எல்லாம் கருகி சாம்பலாய் யோயிருந்தது. அதைக் கண்டு அவனுக்கு துக்கம் தாங்க முடியவில்லை. தனக்கு ஒதுங்குவதற்கு என்று இருந்த ஒரே இடமும் போயிற்றே என்று கடவுளை சபிக்க ஆரம்பித்தான். இனி என்ன செய்வது என்று தெரியாத நிலையில் தன் வாழ்வையே முடித்க் கொள்ள எண்ணி, கடலுக்கு அருகில் வந்த போது, தூரத்தில் ஒரு கப்பல் வருவதைக் கண்டான். ஒரு படகு அவனை நோக்கி வந்தது. அவன் மீட்கப்பட்டான். கப்பலில் அவன் போய் சேர்ந்தபின்பு, அங்கு மாலுமியை நோக்கி, எப்படி நான் இங்கு இருப்பதை அறிந்தீர்கள்? என்றுக் கேட்டான் அதற்கு அந்த மாலுமி, 'இந்தத் தீவிலிருந்து நெருப்பு வருவதைப் பார்த்தோம். அதன் மூலம் யாரோ இங்கு இருப்பதை அறிந்து, படகை அனுப்பினோம்' என்றுக் கூறினார்.
.
அப்போதுதான் அவன் உணர்ந்தான், கர்த்தருடைய வழிகள் நம் அறிவிற்கு எட்டாதவை என்று. அவனது கூடாரம் எரிந்துப போனது, கர்த்தர் அந்தக் கப்பலுக்கு கொடுத்த சமிக்ஞை என்று அறிந்த பொது அவன் கண்களில் கண்ணீh வந்தது. தான் கர்த்தரை சபிதததற்காக அவரிடம் மன்னிப்பு வேண்டினான்.
.

நாம் சில வேளைகளில், நம் வாழ்வில் நடக்கும் சம்பவங்களைக் குறித்து வேதனைப்பட்டு, ஏன் எனக்கு இந்த வேதனை என்று தவித்துப் போகிறோம். நம்முடைய காலங்கள் கர்த்தருடைய கரத்தில் இருப்பதால், அவர் நமக்கு தேவை என்ன என்பதை அறிந்திருக்கிறார். நாம் நிகழ்காலத்தைதான் பார்க்கிறோம். ஆனால் தேவன் முக்காலத்தையும் அறிந்தவராய் இருக்கிறபடியால் நம்முடைய தேவைகளையும் அது கொடுக்கப்பட வேண்டிய காலத்தையும் அவர் அறிவார்.

.
தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன். – (யோபு 42:2) என்று யோபு சொல்கிறார். ஆகவே, அவர் எல்லாவற்றையும் பொறுப்பெடுத்து, செய்கிறபடியால் நாம் கலங்க வேண்டிய தேவையில்லை. அவர் செய்ய நினைத்தது தடைபடாது. அது தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.
.
காலங்கள் மாறிடலாம் கர்த்தர் மாறுவதில்லை
மாந்தர்கள் மறந்திடலாம் இயேசு மறப்பதில்லை
அழைத்தவர் உன்னை நடத்திடுவார்
படைத்தவர் உன்னைக் காத்திடுவார்
.

2 comments:

  1. hai miga arumaiyana karutthukkal,but inru thavarana podhagam makkal matthiyil sollappaduvadhal makkal sariyana valiyil nadakka mudiya villai unmaiyana yesu christ patri solvadhai vidutthu kalla podhagam dhan valarndhu warugiradhu so pry.

    ReplyDelete
  2. நன்றி saha தங்கள் கருத்து முற்றிலும் உண்மை..கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்..

    ReplyDelete